திருச்சிராப்பள்ளி, மே 18-
தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணி யாளர் சங்கத்தினர் வியாழ னன்று துறையூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலு வலகத்தில் குடும்பத்துடன் தொடர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
சாலைஆய்வாளர் சுரேஷ், உதவி கோட்டப் பொறியாளர் ஈப்பு ஓட்டுநர் இளையராஜா, லாரி டிரை வர் கோபி ஆகியோர் சாலை பணியாளர்களை தகாத வார்த்தையால் திட்டியது மற்றும் சாலை ஆய்வாளர் சுரேஷ் பணியாளர்களிடம் ஊழியர் விரோதப் போக்கு டன் நடந்து கொள்வதை கண் டித்தும், சாலைப்பணியா ளர்கள் சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற் குரிய கருவி, தளவாடங்கள், காலனி, மழைக்கோட் உள் ளிட்ட பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கிட வேண் டும், சாலைப்பணியாளர் களை அரசு விதிமுறை களுக்கு புறம்பாக மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. சாலை பராமரிப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் அறி விக்கப்பட்டது.
இதையடுத்து துறையூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் துறை யூர் மண்டல துணை வட் டாட்சியர், வருவாய் ஆய்வா ளர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்டத் தலை வர் ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில், சாலைஆய்வாளர் சுரேஷ், உதவி கோட்டப் பொறியா ளர் ஈப்பு ஓட்டுநர் இளைய ராஜா, லாரி டிரைவர் கோபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர் பாக கோட்டப் பொறியாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள ஏதுவாக உதவி கோட்டப் பொறியா ளர் வாயிலாக பரிந்துரை செய்வது என உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.