அரியலூர், பிப். 14- தேசிய சாலை பாது காப்பு மாத விழாவை யொட்டி, அரியலூரில் போக்குவரத்துத் துறை சார்பில் புதன்கிழமை விழிப் புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். வாகன ஆய்வாளர் சரவணபவா, போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் கார்த்தி கேயன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற கலைக் குழு வினர், தங்களது கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை விதிகளை கடைப்பிடிப்பது, வாகன ஓட்டும் போது கட்டா யம் தலைக் கவசம், சீட் பெல் அணிவது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து எடுத் துரைத்தனர்.