அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில், கணபதி அக்ரஹாரம் அருகே சாலை நடுவே இருந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.