மயிலாடுதுறை, ஜன.8- மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி அருகேயுள்ள அல்லிவிளாகத்தில் செங்கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர் காழியை அடுத்துள்ள அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், ஆலங் காடு உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்க ரில் விவசாயிகள் பாரம்பரியமாக செங்கரும்பு சாகுபடி செய்து வருகின்ற னர். ஆண்டுதோறும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து பொங்கல் தொகுப்புக்காக அரசு செங் கரும்பு கொள்முதல் செய்வது வழக்கம். இந்தாண்டு தனி நபரிடம் மட்டும் பொங்கல் தொகுப்புக்காக அரசு அதி காரிகள் செங்கரும்பு கொள்முதல் செய்ய உள்ளதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போன விவசாயிகள் தனி நபரிடம் செங்கரும்பு கொள்முதல் செய்வதைக் கைவிட்டு, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் தமிழக அரசு செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அல்லிவிளக் கம் அய்யா கோவில் அருகே கரும்புக் கட்டுகளுடன் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோ வன் மற்றும் திருவெண்காடு காவலல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு வழிகாட்டு தலின்படி தகுதியுள்ள கரும்புகள் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்தனர்.