districts

img

தொழிலாளர் சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெறுக! அனைத்துத் தொழிற்சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 23-  தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட  தொகுப்புகளாக திருத்தியதை திரும்பப்  பெற வேண்டும். பெட்ரோலிய பொருட் கள் மீதான கலால் வரியை குறைத்து  அனைத்து பொருட்களின் விலையேற் றத்தை கட்டுப்படுத்த வேண்டும். செல்வ வளம் மிக்கவர்களிடம் சொத்து வரி  வசூலித்து பொது முதலீட்டை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உரு வாக்க வேண்டும்.  வருவாய் இல்லாத குடும்பங்க ளுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை மெயின் கார்ட்கேட் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தொ.மு.ச ஜோசப் நெல்சன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏஐசிசிடியூ ஞான தேசிகன், எல்டியுசி கார்த்திகன் ஆகி யோர் பேசினர். 

வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்ச் 28,  29 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய  வேலை நிறுத்தத்தை விளக்கியும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக திருச்சி, கொட்டப்பட்டு பணி மனை, காரைக்குடி, திண்டுக்கல், தஞ்சை, குடந்தை, நாகை மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று திருச்சி டி.வி.எஸ்  டோல்கேட் பகுதியில் உள்ள எஸ்.சி.டி.சி  பணிமனை முன்பு வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச பொரு ளாளர் கருணாநிதி தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி எஸ்.சி.டி.சி சிஐடியு பொதுச் செயலாளர் கனக ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெயரா மன், சம்மேளனக் குழு உறுப்பினர் முத்து வேல், மாநில உதவி செயலாளர் அருள் தாஸ், மாநில உதவி தலைவர் ரெங்கரா ஜன், தொமுச துணை பொது செயலா ளர் வைத்தியநாதன், தொமுச நிர்வாகி கள் பேசினர். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்
அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் தலைமை அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சம்மேளன மாநில துணை செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி தொமுச பொதுச் செயலாளர் பாண்டியன், சிஐடியு கௌரவத் தலை வர் ஆர்.மனோகரன், மாவட்ட பொரு ளாளர் எம்.கண்ணன், சம்மேளன பொதுச் செயலாளர் கோவிந்தராஜன், ஐஎன்டியுசி வைத்தியநாதன், செல்வ ராஜ் ஏஐடியு தில்லைவனம் அம்பேத்கர் தொழிற்சங்க பொறுப்பாளர் மதிய ழகன், எம்எல்எம் பாலு, எச்எம்எஸ் முரு கேசன் உள்ளிட்டோர் பேசினர்.