districts

img

மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

திருவாரூர், பிப்.21-  நிரந்தர துப்புரவுப் பணியிடங்க ளை ரத்து  செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி யும்   தொழிலாளர்களை பாதிக்கும்  வகையிலான நடவடிக்கையில் ஈடு பட்ட ஒப்பந்தக்காரரைக் கண்டித்தும் தூய்மைப்பணியாளர்கள் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின் தலைமையில் வேலைநிறுத்தம் செய்து. மன்னார்குடி நகராட்சி அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து நகராட்சி ஆணையர் தலைமையில் சிஐடியு தலைவர்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்த நிறுவனமான எஸ்.ஆர் எண்டர்பிரைசஸ் பிரதிநிதி ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடை பெற்றது.  இதில், நகராட்சி ஒப்பந்தக்காரரின் உறவினரால் அலைக்கழிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பழைய இடத்திலேயே பணிபுரிய உத்தர விட்டும்,பணியிலிருந்து நிறுத்தப் பட்ட 11 ஒப்பந்த தூய்மை பணியா ளர்களை நாளை முதல் தூய்மை  பணிக்கு அனுப்புவது என தனியார்  நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது, தனியார் தூய்மை பணியாளர்க ளின் ஊதியம் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநரின் உத்தரவு, மாவட்ட ஆட்சித் தலைவரின் தினக் கூலி பணி உத்தரவு நகல் மற்றும் தனி யாருக்கு வழங்கப்பட்ட பணி உத்தரவு நகல் வழங்குவதாக தெரிவிக்கப் பட்டது, எஸ்.ஆர்.எண்டர்பிரைசஸ் வெளிக் கொணர்வு ஒப்பந்ததாரரின் தூய்மை பணியாளர்களுக்கு பிரதி மாதம் 7 ஆம் தேதி ஊதியம் வழங்குவதாக ஒப்பந்ததாரரின் பிரதிநிதியால் உறுதி அளிக்கப்பட்டது, வரும் காலங்களில் தனியார் தூய்மைப்ப பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் உத்தரவின்படி உரிய எண்ணிக்கையில் தரத்துடன் வழங்குவதாக ஒப்பந்ததாரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒப்பந்த தூய்மை பணியாளர்க ளின் இபிஎப் (EPF) முடக்கப் பட்டுள்ளதை அலுவலகம் மூலமாக 20-02-2024 அன்று கும்பகோணம்  இபிஎப் அலுவலகம் சென்று ஆய்வு செய்து அவர்களின் அறிவுரைக ளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் எழுத்துப்பூர்வ மாக எழுதி ஒப்புக்கொண்ட அடிப்ப டையில் தற்காலிகமாக வேலை நிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப் பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என். அனிபா,தூய்மைப் பணியாளர் சங்கத்தின் தலைவர் ஜி.ரகுபதி, தூய்மை பணியாளர்கள் சங்க தலை வர் கே.சிவசுப்பிரமணியன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், சாலையோர விற்பனையாளர்கள் சங் கத்தின் நகரச்செயலாளர் ஜி.முத்து கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்ற னர்.