தஞ்சாவூர், மார்ச் 29- கவிஞர் தமிழ்ஒளி 60 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு தமுஎகச தஞ்சை மாவட்ட உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், தமிழ்ஒளி நூற்றாண்டுக் குழு பொருளாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர், பல்கலைக்கழக மொழிப்புல அரங்கில் நடந்த கூட்டத்தில், பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர்கள் பிரபாகரன், இளையாபிள்ளை, சீமோன் இளையராஜா, தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், கவிஞர் வல்லம் தாஜ்பால் ஆகியோர் உரையாற்றினர். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.