சென்னை, ஆக. 26-
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தோட்டத்தில், புதிய தலைமை செயலகத்தை அமைக்க வேண்டும்’ என, திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் தலை மையில், நிர்வாகிகள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, கலை இரவாக நடத்தப்படும்.
விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பறை யாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு மற்றும் கருணாநிதி எழுதிய நாடகங்கள் நடத்தப்படும் சென்னை தலைமை செயலகம், இட நெருக்கடியால் சிரமப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், ஆளுநர் மாளிகையின் தோட்டம் உள்ள பகுதி யில், புதிய தலைமை செயலகத்தை அமைக்க தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.