தஞ்சாவூர், டிச.25 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம், வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய கூட்ட மன்ற அறையில், ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில், முதுகாடு ஒன்றியக்குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி (திமுக) பேசுகையில், அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும். புதுப்பட்டி னம், கொள்ளுக்காடு ஆகிய இடங்களில் உள்ள இரண்டு புயல் பாதுகாப்பு மையத்தை பழுது நீக்கி, தண்ணீர் வசதி ஏற்படுத்த ஊராட்சி பொது நிதியி லிருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. புயல் பாது காப்பு மையம், வருவாய், பேரிடர் மேலாண்மை துறையின் பொறுப்பில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றியத்தில் நிதிப்பற்றாக் குறை இருக்கும்போது, இதற்கு நாம் ஏன் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும். திருவத்தேவன் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சுதாகர், மரக்காவலசை ஒன்றியக்குழு உறுப்பினர் நா.சாகுல்ஹமீது (திமுக), விளங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர் க.செய்யது முகமது (திமுக) ஆகியோர் தங்கள் பகுதியின் கோரிக்கைகளை பேசினர். ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக் கம், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். வந்துள்ள நிதி நிலைக்கேற்ப பணிகள் பிரித்து வழங்கப்படும் என்றார்.