ராணிப்பேட்டை, ஆக. 21- ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லும் மாணவனை தெரு நாய்கள் வெறித்தனமாக விரட்டி சென்றது. அப்போது பெண் ஒருவர் நாய்களை விரட்டி அடித்து சிறுவனை மீட்ட காட்சி சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கணபதி புரத்தில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் நிர்மலை, தெருவில் சுற்றித் திரிந்த வெறி நாய் கடித்தது. இதன் மூலம், ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் 45 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.