மயிலாடுதுறை, நவ.8 - மேமாத்தூர் ஊராட்சி யில் பயன்பாடின்றி உள்ள பாழடைந்த துணை சுகாதார நிலையத்தை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட மே மாத்தூர் ஊராட்சியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பயன் பாடு இல்லாமல் பாழடைந்த துணை சுகாதார நிலையம் கட்டடம் பராமரிப்பு இன்றி மரங்கள், செடி கொடிகள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேமாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார வளாகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள், குழந் தைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு வரும் பொது மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அகற்றப்படாமல் உள்ள இந்த பாழடைந்த துணை சுகாதார நிலையம் கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டடம் என்ப தால், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்தக் கட்டத்தில் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்கள் உடைத் துப் போட்டுள்ளனர். இங்கு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பயன்பாடின்றி உள்ள பாழடைந்த துணை சுகாதா ரம் கட்டிடத்தை அகற்றி விட்டு, அனைத்து வசதிகளு டன் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தர வேண்டு மென பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.