districts

   நாகப்பட்டினம் நகராட்சியில் நிவாரணம் வழங்க கோரிக்கை

மன்னார்குடி, ஜூன் 23 -

     நாகப்பட்டினம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த விஜய், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு  வெள்ளிக்கிழமை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு எம்.வினோத் குமார் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட  ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் ஜி.ரகுபதி, கௌரவ தலைவர் கே.எஸ்.சிவசுப்பிரமணியன், செயலா ளர் எஸ்.சுதாகரன், துணைச் செயலாளர் சிங்காரம், துணைத்தலைவர் விஜயா உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் சிறப்புரையாற்றினார்.