districts

பொதுப் பாதைக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 25 -  

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சியில் பொதுப் பாதைக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள்  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் பிரபாகரனிடம் மனு அளித்தனர்.

    அம்மனுவில், குருவிக்கரம்பை ஊராட்சி முனுமாக்காட்டிலிருந்து நாடா காடு செல்லும் தார்ச்சாலைக்கு வடக்கில், 15-க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கான பொதுப் பாதையாக அரசுக்குச் சொந்த மான நத்தம் புறம்போக்கு நிலம் இருந்து  வந்தது. இந்த பாதைக்கு வருவாய்த்  துறையினர் 2020-இல் தனியாருக்கு பட்டா வழங்கினர். அவ்வாறு பட்டா  பெற்றவர்கள், நாங்கள் பாதையில் செல்வதற்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்.  

  இது தொடர்பாக நிலநிர்வாக ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டு, விசாரணையில் பட்டாவை ரத்து செய்ய  19.11.2022 இல் உத்தரவு பிறக்கப்பட் டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு பட்டாவை ரத்து  செய்து, எங்களுக்கு பாதை வழங்க  வேண்டும் என கோரிக்கை தெரிவித்து உள்ளனர்.