districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாபநாசம்,  ஜன.20- தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் அருகே விழுதியூர் ஊராட்சி  மணக்குடி கிராமத் தில் மெயின் சாலையை யொட்டி நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடு களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை  கிளை ஆணை பிறப்பித் தது. அதன்பேரில் ஆக்கி ரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதில் பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், பாபநாசம் நெடுஞ்சாலைத் துறை  உதவிக் கோட்டப் பொறி யாளர் பானுதாசன், டி.எஸ்.பி அசோக் மற்றும்  ஆய்வாளர் பாபநாசம் கலைவாணி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

விவசாயிகளுக்குப் பயிற்சி

அறந்தாங்கி, ஜன.20 - வேளாண்மை தொ ழில்நுட்ப முகமை வாயி லாக, மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறு துணை சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இதன்கீழ் விவ சாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி ‘நெல்லுக்கு பின் பயறு சாகுபடி’ என்ற தலைப் பில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் வட்டாரம் குன்னூர் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு மத்திய திட்டம் ஆதிசாமி வேளாண்மை துணை இயக்குநர், எடுத்துக் கூறினார். ஆவுடையார்கோ வில் வேளாண்மை உதவி  இயக்குநர் (பொ) சவீதா  வேளாண்மை துறை யின் மூலம் செயல்படுத் தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், நெல் தரிசில் உளுந்து  சாகுபடி தொழில்நுட் பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் குன்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மணிமேகலை கலந்து கொண்டார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை

 திருநெல்வேலி, ஜன. 20- நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  சனிக் கிழமையன்று மிதமான மழை பெய்துள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஊத்துப்பகுதியில் 23  மில்லி மீட்டரும்,  நாலு  முக்கில் 21 மில்லி மீட்ட ரும், காக்காச்சியில் 12  மில்லி மீட்டரும், மாஞ் சோலை பகுதிகளில் 8  மில்லி மீட்டரும் மழை  பொழிவு பதிவாகி யுள்ளது. மாவட்ட சம வெளி பகுதியான சேரன் மகாதேவியில் 1.6 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவான நிலையில், நெல்லை மாநகரம் முழுவதும் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது  மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தில் இருந்து 1203 கன அடி நீரும் மற் றொரு அணையான மணி முத்தாறில் இருந்து 380 கன அடி நீரும் பாச னத்திற்காக திறக்கப் பட்டுள்ளது. நெல்லை மாவட்டத் தில் அனைத்து அணை களும் நிரம்பி வழி கின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

கந்தர்வகோட்டை, ஜன.20 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஒன்றியம் புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு ஓவியப் போட்டி  சனிக்கிழமை  நடைபெற்றது.  நிகழ்ச்சியில் இல்லம்  தேடி கல்வித் திட்ட ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர் ரகம துல்லா சுற்றுச்சூழல் விழிப் புணர்வு உரையாற்றினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஓவிய போட்டியில் சிறப்பாக பங்க ளிப்பு செய்த மாணவர் களுக்கு பாராட்டி பரி சளிக்கப்பட்டது.  முன்னதாக தன்னார் வலர் ராஜலெட்சுமி வரவேற்க,  தன்னார்வலர் சாரதா நன்றி கூறினார்.

மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை, ஜன.20 - மஞ்சுவிரட்டு போட்டியிலும் அசம்பாவித சம்பவங்கள் நேரிடாமல் இருக்க எதிர்காலத் தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகு பதி.  புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் சுகாதார கட்டமைப்பு பகுதிகளை மேம்படுத்துவதற்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்து அரசு அலுவலர் களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அவை  முதல்வரிடம் அறிக்கையாக அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மகப்பேறு சிகிச்சை மர ணங்கள் குறித்தும் பேசப்பட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு என்ன விதிமுறைகள் உள்ளனவோ, அதே விதிமுறைகள் மஞ்சு விரட்டுக்கும் பொருந்தும். மஞ்சுவிரட்டில் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடு வதால் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடுகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு உரிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்” என்றார்.

அனுமதியின்றி கல் உடைத்து  வாகனத்தில் ஏற்றிய 2 பேர் கைது

புதுக்கோட்டை, ஜன.20 - கீரனூர் அருகே அனுமதியின்றி பாறையில் கல் உடைத்து வாகனத்தில் ஏற்றிய 2 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையைச் சேர்ந்த வர் லாரி ஓட்டுநர் என்.சிதம்பரம் (24). சித்தன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா  (24). கல் உடைக்கும் வாகன ஓட்டுநரான இவர்கள் இருவ ரும், நார்த்தாமலையில் சனிக்கிழமை அனுமதியின்றி வாகனத்தின் மூலம் கல்லை உடைத்து லாரியில் ஏற்றி யுள்ளனர்.  அப்போது, அவ்வழியே ரோந்து சென்ற கீரனூர்  போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்த தோடு, 2 வாகனங்களையும், உடைத்து லாரியில் ஏற்றப்பட்ட கற்களையும் பறிமுதல் செய்தனர். மேலும்,  தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் மணியம் பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் வேலு மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் வந்த கணவரின் உடல் பாபநாசம் எம்எல்ஏ-வுக்கு  நன்றி தெரிவித்த பெண்

பாபநாசம், ஜன.20 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை நியூ டவுனைச்  சேர்ந்தவர் முருகானந்தம் (60). இவர் பஹ்ரைன் நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஜன.9 அன்று இதய நோய் காரணமாக இறந்துவிட்டார்.  இறந்த அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர  வேண்டுமென, அவரது மனைவி கோமதி பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா-விடம் கோரிக்கை வைத்தார்.  அதன்படி, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பஹ்ரைன் நாட்டில் செயல்ப டும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சுதீர், பொன்னுசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அயலக பிரிவான ‘இந்தியன் வெல்பேர் போரம்’ அமைப்பின் பஹ்ரைன் தலைவர்  யூசுப் ஆகியோரின் முயற்சியால், பஹ்ரைனி லிருந்து விமானம் மூலம் முருகானந்தம் உடல் சென்னை  வந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஏற்பாடு செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் அய்யம்பேட்டை வந்தடைந்தது. தொடர்ந்து முருகானந்தத்தின் குடும்பத்தினர் அவ ருக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். இறந்த முருகா னந்தத்தின் உடலை இந்தியா கொண்டு வர முயற்சி எடுத்த பஹ்ரைன் தமிழ் அமைப்புகள், எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில்  கூடுதல் பெட்டி இணைப்பு

தூத்துக்குடி,ஜன.20-  குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த  ரயிலில் வருகிற 26 ஆம் தேதி முதல் புதிதாக எடை  குறைந்த (எல்.எச்.பி.) ரயில் பெட்டி இணைக்கப்படு கிறது. ஏற்கனவே 19 ரயில் பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக பொருட்களை கொண்டு  செல்ல கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜன.20- தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் ஜனவரி 8 அன்று நிறுத்தப்பட்டி ருந்த வழக்குரைஞரின் வாகனத்தைத் தவணைத் தொகை செலுத்த வில்லை எனக் கூறி தனியார் நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வாகனத்தை எடுத்துச்  சென்றதாகவும், இது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் புகார்  செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறி வழக்குரைஞர்கள் தெற்கு காவல் நிலையம் முன்பு சச்சிதானந்த மூப்பனார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட் டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்களிடம், ‘நிதி நிறுவனத்தினரை அழைத்து  விசாரிப்பதாகக்’ கூறினர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.

மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

புதுக்கோட்டை, ஜன.20 - புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.  பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், கலை, இலக்கி யம், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் விருது கள், பதக்கங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளி ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி தலைமை  வகித்தார். அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மைய தலைமை மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், பேராசிரியர் அய்யாவு, கவி ஞர் மகாசுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவு ரவித்தனர்.  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்க, ஒருங்கி ணைப்பாளர் கோமதிபிள்ளை நன்றி கூறினார். அரசு சிறப்பு வழக்கறி ஞர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் ஆய்வு கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.20 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், 2024-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம் வாக்கா ளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடா சலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா முன்னிலையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நில  சீர்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் என். வெங்கடாசலம் தலைமையில், வெள்ளிக் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.   சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024-ன்படி படிவம் 6-ல் 31,364 படிவங்களும், படிவம் 7-ல் 10,557 படிவங்களும், படிவம் 8-ல் 8,797 படிவங்களும் ஏற்கப்பட்டுள்ளது என  புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்தார்.  பின்னர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகி யோர் பார்வையிட்டனர்.