புதுக்கோட்டை, பிப்.27- தனியார் பள்ளிகளில் மதச் சடங்குகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாய்க் கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத் தின் புதுக்கோட்டை நகரத் தலைவர் எஸ்.மகா லெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் சா. ஜனார்த்தனன், துணைத் தலைவர் வசந்த குமார் உள்ளிட்டோர் பேசினர். தனியார் பள்ளிகளில் மதச் சடங்குகள் நடத்த அனுமதிக்கக் கூடாது. இது தொடர் பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும் என முழக்கங் கள் எழுப்பினர். நகரத் தலைவர் பரத் நன்றி கூறினார்.