திருவாரூர், அக்.29 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான தி.சாருஸ்ரீ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் வெளியிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன் னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாயன்று வெளியிடப் பட்டது. அதன்படி திருவாரூர் மாவட் டத்தில் 513226 ஆண்களும், 539055 பெண்களும், 70 இதரர் என மொத்தம் 10,52,351 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் திரு வாரூர் மற்றும் மன்னார்குடி வரு வாய் கோட்ட அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் 29.10.2024 அன்று முதல் வைக்கப்படும். பொது மக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற் றுள்ளதா என்பதை மேற்படி அமை விடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியல் களை https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் பொது மக்கள் காணலாம் என ஆட்சியர் தி. சாருஸ்ரீ தெரிவித்தார். புதுக்கோட்டையில் 13,54,752 வாக்காளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,54,752 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025, வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் 6,69,474 ஆண், 6,85,211 பெண், 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,54,752 வாக்காளர்கள் இடம்பெற் றுள்ளனர். 2024-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் 13,45,361 பேர் இடம்பெற்றிருந்த னர். 2024-ஆம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின்போது 6,018 ஆண், 6,547 பெண், மூன்றாம் பாலி னத்தவர் 10 என சேர்த்து 12,575 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற 29.10. 2024 முதல் 28.11.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 6.1.2025 அன்று வெளியிடப்பட்ட உள்ளது” என்றார். தஞ்சாவூரில் 20,51,069 வாக்காளர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தஞ்சா வூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்ட மன்ற தொகுதிகளுக்கான ஒருங்கி ணைந்த வரைவு வாக்காளர் பட்டி யலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,97,868 ஆண் வாக்காளர்களும், 10,53,024 பெண் வாக்காளர்களும், 177 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்த வாக்காளர்கள் 20,51,069 உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்கா ளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவ லகங்களிலும், மாநகராட்சி, நக ராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக 26.12.2024 வரை வைக்கப்பட்டுள்ளது. கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வா யன்று கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ண ராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதி களின் 2025 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய ஒருங்கி ணைந்த வரைவு வாக்காளர் பட்டி யல்களை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.