அரியலூர், செப்.12- அரியலூர் மாவட்டத்தில் விநா யகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கீழ்க்கண்ட வழிமுறை களை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், நீர்நிலை களை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்க ளில் மட்டும் கரைத்து, சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். களிமண்ணால் செய்யப் பட்டது, பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றது மான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாது காப்பான முறையில் கரைக்க அனு மதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறு கள், வைக்கோல் மற்றும் சிலை களை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன் படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப் படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு,
வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன் படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசு வதற்கு நச்சு மற்றும் மக்காத ரசா யன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தவே கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படை யாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப் பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாய னங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடை கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிகளின்படி, அரியலூர் பகுதியில் மருதையாறு, திருமா னூர் பகுதியில் கொள்ளிடம் ஆறு, ஜெயங்கொண்டம் பகுதியில் கொள்ளிடம் ஆறு, அணைக்கரை ஆகிய பகுதிகளில் மட்டுமே விநா யகர் சிலைகளை கரைக்க அனு மதிக்கப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வாறு விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்கா ணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் செயல்படக் கூடாது
புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல் புதுக்கோட்டை, செப்.12 - விநாயகர் சதுர்த்தி ஊர்வ லத்தில் மற்ற மதத்தினரை அச்சு றுத்தும் வகையிலோ, துன்புறுத்தும் வகையிலோ முழக்கங்களை எழுப்பக் கூடாது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு தொ டர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர், புதுக் கோட்டை மாவட்டத்தில் விநாய கர் சதுர்த்தி விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. விநாயகர் சிலை அமைப்பதற்கு நில உரிமை யாளர்கள், காவல்துறை, தீயணைப் புத்துறை, மின்சாரத் துறையிடம் தடையின்மை சான்றுகளை பெற்று, வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைப் படுத்தும் வழிமுறைகளின்படி, நீரில் கரையக்கூடிய, நச்சு இல்லாத இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சிலைகளை தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும். கூம்பு வடிவி லான ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. எந்த சூழ்நிலை யிலும் மற்ற மதத்தினரை பாதிக்கும், துன்புறுத்தும் வகையில் சத்தமாக முழக்கங்களை எழுப்பக் கூடாது. காவல்துறையால் பரிந்துரைக் கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். அனு மதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலையைக் கரைக்க வேண் டும். பட்டாசு மற்றும் வெடிபொ ருட்களை வெடிக்க அனுமதி கிடை யாது. விழாக் குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) து.தங்கவேல், கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.