திருச்சி, டிச.19- திருச்சி கே.கே.நகர் அடுத்த ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகில் உள்ள மின்மாற்றியை (டிரான்ஸ்பாரம்) மாற்றி அமைக் கக் கோரி பெட்ரோல் பங்க் உரிமை யாளர் கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தி ருந்தார். இந்நிலையில், மின்மாற்றியை மாற்றியமைக்கும் பணி புதனன்று நடைபெற்றது. அப்போது அருகி லிருக்கும் 11 கே.வி உயர் மின் அழுத்தக் கம்பத்திலிருந்து மின் மாற்றிக்கு வரும் மின் கம்பியை துண்டிப்பதற்காக மருங்காபுரி, கல்லுப்பட்டியைச் சேர்ந்த கலா மணி (42) மின் கம்பத்தில் ஏறினார். மின் கம்பத்தின் கீழ் பகுதியில் மணப்பாறை அருகே வேங்கைக் குறிச்சி அருணாம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் (33) என்பவர் நின்று கொண்டிருந்தார். இரு வரும் மின்வாரிய ஒப்பந்தப் பணி யாளர்கள் ஆவர். மின் கம்பியை துண்டிக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்ததில் கலாமணி மின் கம் பத்தில் தொங்கியபடியே கருகி உயிரிழந்தார். கம்பத்தில் மின்சா ரம் பாய்ந்து கீழே நின்று கொண்டி ருந்த மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மின்வாரிய அதிகாரிகள், உயி ருக்கு போராடிக் கொண்டிருந்த மாணிக்கத்தை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவம னைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த னர். மின் கம்பத்தில் தொங்கியபடி யே உயிரிழந்த கலாமணியின் உடலை திருச்சி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்ட னர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மணி கண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். கலாமணிக்கு கூலி வேலை பார்க்கும் மணிமேகலை என்ற மனைவியும், திருமணமான ஒரு மகள் உள்பட 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மாணிக்கத்துக்கு சித்ரா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இரண்டு மின்வாரிய ஒப்பந்த தொழி லாளர்களின் உறவினர்கள் மற்றும் சிஐடியு மின்வாரிய தொழிற்சங் கத்தினர் திருச்சி அரசு மருத்துவ மனையில்,அவரது உடலை வாங்க மறுத்து புதனன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வியாழ னன்றும் இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட் டத்தில் உறவினர்கள் ஈடு பட்டுள்ளனர். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிடுக இது குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் கூறுகையில், திருச்சி கே.கே. நகர் ஓலையூர் ரிங் ரோடு அருகில் தனியார் நிறுவனத்திற்காக மின்மாற்றியை மாற்றி அமைப்ப தற்காக கே.கே.நகர் மின்வாரிய அதிகாரி வாய்மொழியாக உத்தர விட்டு மின்வாரிய ஒப்பந்த ஊழி யர்களை 11 கே.வி (11 ஆயிரம் கிலோ வாட்) மின்பாதையில் எவ்வித மின்தடை பாதுகாப்பு சாத னங்களை பயன்படுத்தாமல், மின்சாரம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்யாமல் வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் கலாமணி மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கியபடி உயிரி ழந்துள்ளார். மின் கம்பத்தின் அடியில் இருந்த மாணிக்கம் மின்சா ரம் தாக்கி படுகாயம் அடைந்துள் ளார். மேலும் சுமார் 2 மணி நேரம் கழித்தே தீயணைப்பு துறையினர் வந்து கலாமணி உடலை மீட்டுள்ள னர்.மின்சாரம் தாக்கி சுமார் 2 மணி நேரத்துக்கு பின்பு தான் மாணிக்கத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் நடந்து சுமார் ஐந்து மணி நேரம் ஆகியும் மின்வாரிய அதிகாரிகள் ஒருவர் கூட உயிரி ழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. மேலும் இறந்து போனவர்களின் குடும்பத்தினருடன் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு ஐந்து லட்சம் தருவதாக கூறுகிறார்கள். ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை ஏற்ற பின்னரே இறந்தவர்களின் உடல்கள் பெற்றுக் பெற்றுக் கொள்ளப்படும்’ என்றார். இதையடுத்து இரண்டாவது நாளாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.