கும்பகோணம், மே 26-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர் களுக்கு நினைவூட்டும் பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட அலுவ லர் சா.குமார் முன்னிலையில், உதவி மாவட்ட அலுவலர் கோ.கணேசன், நிலைய அலுவலர்கள் கும்பகோணம் பால சுப்பிரமணியன், திருவிடைமருதூர் நா.மாறன் பாபநாசம் செல்வம், திருவையாறு அருணா தினேஷ் ஆகியோர் தீய ணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு நினைவூட்டல் பயிற்சியளித்தனர்.
இதில் சிறப்புக் கருவிகள் இயக்கம், பயிற்சி, நீர் தாங்கி வண்டிப் பயிற்சி, ஏணிப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி, கயிறு களும் முடிச்சுகளும் பயிற்சி, உடற்பயிற்சி, அணி பயிற்சி ஆகியவை நடைபெற்றது.