136-வது மே தின விழா சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். முன்னதாக ரோவர் ஆர்ச் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியை சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன் துவக்கி வைத்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் பி.சிங்காரன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.