districts

img

காசா, லெபனான் மீதான போரை நிறுத்த கோரி தஞ்சையில் பேரணி, பொதுக்கூட்டம்

தஞ்சாவூர், நவ.24-  பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான போர் நிறுத்தப்பட  வேண்டும். பாலஸ்தீனத்தின் இறை யாண்மையை பாதுகாக்க வேண்டும். போரில் குழந்தைகள், அப்பாவி பொது மக்கள் பலியாவதை தடுக்க இந்திய அரசும்,  ஐநா மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில், சனிக்கிழமை தஞ்சா வூர் ரயிலடியில் இருந்து பேரணியும், அதைத்  தொடர்ந்து பனகல் கட்டிடம் அருகில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.  உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் சிபி எம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத்  தலைவர் இரா. அருணாச்சலம் வரவேற்றார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், விசிக மாவட்டச் செயலாளர் கோ.ஜெய சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர், ஐக்கிய  விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.வி.கண்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் உட்பட  பல்வேறு ஜனநாயக அமைப்பினர் பங்கேற்ற னர்.  இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கி ணைப்பாளர் துரை. மதிவாணன் நன்றி கூறி னார்.