districts

img

புதுகை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை, ஜன.18:- புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 737 காளை கள் பங்கேற்றன. காளை கள் முட்டியதில் 22 பேர் காய மடைந்தனர். புதுக்கோட்டை மாவட் டம் வடமலாப்பூரில் நடை பெற்ற ஜல்லிகட்டுப் போட் டியை மாநில சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டி யன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, கோட்டாட்சி யர் எஸ்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை, தஞ்சா வூர், சிவகங்கை, திண்டுக் கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 737 காளைகள் வாடிவாச லில் இருந்து அவிழ்த்துவிடப் பட்டன. 200 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு, வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.  காளைகளை அடக்கிய தில் மாடு பிடி வீரர்கள் 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். படு காயமடைந்த 12 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 150-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.