districts

img

நலத்திட்ட உதவிகள்: புதுகை ஆட்சியர் வழங்கல்

புதுக்கோட்டை, மார்ச்.3-  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 580 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்புடைய விபத்து மரணத்திற்கான உதவித்தொகையும் மற்றும் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,53,000 மதிப்புடைய ஈமச்சடங்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும் மற்றும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16,000 மதிப்புடைய நலவாரிய கல்வி உதவித்தொகையும் 17 பேருக்கு ரூ.4,69,000 மதிப்புடைய பல்வேறு அரசு நலத்திட்ட உதவித் தொகைக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.