districts

img

தேர்தல் பத்திரங்கள் பட்டியலை வெளியிடுக! நாகப்பட்டினத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 11- உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்தல்  பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டி யலை பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக வெளியிடக் கோரி, நாகப்பட்டினம் மற்றும் திருக்குவளையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் எஸ்பிஐ வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தலைமை வகித்து உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகையன், ப. சுபாஷ் சந்திரபோஸ், என்.எம்.அபு பக்கர், நாகை நகரச் செயலாளர் க. வெங்கடேசன், நாகை தெற்கு ஒன்றியச்  செயலாளர் ஏ.வடிவேல், திருமருகல் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின் பாபு, நாகை வடக்கு ஒன்றியச் செயலா ளர் வி.வி.ராஜா உள்ளிட்டோர் பேசி னர். திருக்குவளை எஸ்பிஐ வங்கி முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.அம்பிகாபதி, ஏ.வேணு, ஒன்றியச் செயலாளர்கள் டி.வெங்கட்ராமன் (கீழையூர் மேற்கு), எம்.அப்துல் அஜீஸ் (கீழையூர் கிழக்கு), ஏ.ராஜா (தலைஞாயிறு), ஆர்.முத்தையன் (கீழ்வேளூர் தெற்கு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.