districts

img

கொசவன் கண்ணி வாய்க்காலை தூர்வாருக! பொதுப் பணித்துறை அலுவலகம் முற்றுகை

வேதாரண்யம், ஜூலை 5 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பெரிய வாய்க்கால் பிரிவு, கொசவன் கண்ணி வாய்க்கால் முதல் இடம்புரி வாய்க்கால் வரை தூர்வாரக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், லாப்டி விவசாயிகள் - பாசன விவசாயிகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைஞாயிறில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தும், தூர்வாரும் பணியை இதுவரை செயல்படுத்தாத தலைஞாயிறு பொதுப்பணி துறையினரை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் தனபால் தலைமை வகித்தார். போராட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், “உடனடியாக கொசவன் கண்ணி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். இல்லையெனில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்” என்றனர். போராட்டத்தையொட்டி, பொதுப் பணித்துறை அலுவலகம் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.