districts

img

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், மார்ச் 6 - ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் சார்பாக அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாண வர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு வீதியில் உள்ள கௌரிசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த  பேரணியை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ, கொடியசைத்து தொடங்கி வைத் தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்  பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கையின்படி பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி வர வேற்றார். இந்த விழிப்புணர்வு பேரணி யானது, கௌரிசாமி நகராட்சி நடுநிலைப்  பள்ளியில் துவங்கி, தெற்கு, வடக்கு வீதி யாக வடக்கு, கிழக்கு, தெற்கு கோபுர  வாசல் வழியாக வந்து, மீண்டும் கௌரி சாமி நகராட்சி பள்ளியில் நிறை வடைந்தது. இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாண வியர்கள் பங்கேற்றனர்.  நிகழ்வில் முதன்மை கல்வி அலுவ லர் புகழேந்தி, நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற  துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் பிரபாகரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம்  அருகே ராராமுத்திரக் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்பு ணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை  ஊராட்சித் தலைவர் சோழன் தொடங்கி  வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் புனிதா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரா, ஆசிரியர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.  மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி வெண்ணுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் பழனி தொடங்கி வைத்தார். அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி ஊராட்சி  ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நாயக்கர் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்  பள்ளி சார்பில் நடந்த ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.