புதுக்கோட்டை, பிப்.21- புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வத்த னாகுறிச்சியில் சட்ட விரோத மாக இரவு நேரங்களில் இயங்கும் கிரஷர் குவாரி யை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழ மையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாகுறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்ப்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதிதிராவி டர் கூட்டு குடியிருப்பு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கிரஷர், தார் பிளான்டுடன் கூடிய கல் குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த கல்குவாரி அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும் இந்த குவாரியில் வைக்கப் படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின் றனர். இதன் அதிர்வால் குழந்தைகள் மனதளவில் பாதிப்பை சந்தித்து வருகின்ற னர். கர்ப்பிணிப் பெண்களு க்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. கல்குவாரி மற்றும் தார் பிளாட்டிலிருந்து வரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்பட்டு பொது மக்களு க்கு மூச்சுத்திணறல் ஏற்ப டுகிறது. பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. விவசாயம் பாதிக்கப் படுவ தோடு கண்மாய்கள், குடி தண்ணீரும் மாசுபடுகிறது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வத்தனாக் குறிச்சி, வெவ்வயல்ப்பட்டி வத்தனாக்குளிச்சிகாலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல் ப்பட்டி, கதிரேசன்நகர், புதுவயில், திருமலைராய புரம், உடையாம்பட்டி, சூசை யப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவ தால், கிரஷரை மூடக் கோரி கடந்த 4 ஆண்டுகளாக பல முறை மாவட்ட நிர்வாகத்திற் கும் வருவாய் துறையின ருக்கும் சம்பந்தப்பட்ட துறை யினருக்கும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலுப்பூர் வருவாய் கோட்டாட் சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தற்காலிக மாக கிரஷர் குவாரி மூடப் படும் என அதிகாரிகள் உத்தர விட்டனர். இதன் பின்னர் சம்பந்தப் பட்ட கிரஷர் குவாரி இரவு நேரங்களில் மட்டும் செயல் பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி மேற்படி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கிரஷர் குவாரி நுழைவு வாயி லில் அடுப்பு மற்றும் சட்டிகள் வைத்து சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.