districts

img

சட்டவிரோதமாக இயங்கும் கிரஷர் குவாரி வாகனத்தை மறித்து பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை, பிப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கிரஷர் குவாரியை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரின் தலைமையில், வாக னத்தை உள்ளே விடாமல் மறித்து  அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்பட்டி மற்றும் வத்த னாக்குறிச்சி ஆதிதிராவிடர் கூட்டுக்  குடியிருப்பு அருகில் கடந்த 15  ஆண்டுகளுக்கு மேலாக தனி யார் கிரஷர், தார் பிளாண்டுடன் கூடிய கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கல்குவாரி  அரசு விதிகளை மீறி செயல்படுவ தாகவும், இந்த குவாரியில் வைக் கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதிர்வால் குழந்தைகள் மனதள வில் பாதிப்பைச் சந்தித்து வரு கின்றனர். கர்ப்பிணிப் பெண் களுக்கு கருச்சிதைவு ஏற்படு கிறது. கல்குவாரி மற்றும் தார்  பிளாட்டிலிருந்து வரும் தூசி  மற்றும் புகையினால் காற்று  மாசுபட்டு, பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு  வகையான நோய்கள் ஏற்படு கின்றன. விவசாயம் பாதிக்கப்படு வதோடு கண்மாய்களும், குடி தண்ணீரும் மாசுபடுகிறது என  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். இதனால் வத்தனாக்குறிச்சி, வெவ்வயல்பட்டி, வத்தனாக் குறிச்சி காலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல்பட்டி, கதிரேசன் நகர், புதுவயல், திருமலைராய புரம், உடையாம்பட்டி, சூசையப் பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டா ரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம  மக்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.  இந்நிலையில், இந்த கிர ஷரை மூடக் கோரி கடந்த 4 ஆண்டு களாக பலமுறை மாவட்ட நிர்வா கம், வருவாய் துறையினர் மற்றும்  சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்தும் போராட்டங் களை நடத்தியும் வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  இலுப்பூர் வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், குவாரி மூடப்படும் என அறிவித்து, சம்பந்தப்பட்ட கிரஷர் குவாரி இரவு நேரங்களில் மட்டும் செயல் பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரத் தில் சட்ட விரோதமாக செயல்பட்டு  வரும் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த பிப்.21 அன்று  போராட்டம் நடத்தி தடுத்து நிறுத் தப்பட்டது. ஆனால், திங்கள் கிழமை மீண்டும் பகலிலேயே குவாரி செயல்படுவதாக கிடைத்த  தகவலையடுத்து, குவாரிக்குள் வாகனத்தை செல்லவிடாமல் மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச் செல்வன், ஒன்றியக்குழு உறுப்பி னர் எஸ்.பீமராஜ் மற்றும் ஊர் பிர முகர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல்  ஆய்வாளர் தயாளன், தமிழ்நாடு  மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புதுக் கோட்டை உதவி செயற்பொறி யாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். பேச்சுவார்த்தையில், “குவாரி செயல்பட எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. இந்த தகவல் குவாரி உரிமையாளருக்கும் தெரிவிக்கப்படும். குவாரி இனி  செயல்படாது” எனத் தெரிவித்த னர். பின்னர் போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டது.