திருச்சிராப்பள்ளி, செப்.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை யில் கட்டட தொழிலாளி ஆறு முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுத் தார். அம்மனுவில், “நாங்கள் உய்யக்கொண்டான் ஆற்றங் கரையோரம் உள்ள பகுதி யில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இக்குடியிருப்புகளுக்கு முறையாக பட்டா மற்றும் வீட்டு வரி கட்டி மின்சார இணைப்பு பெற்று வாழ்ந்து வருகிறோம். ஆதிநகர், சாந்தா ஷீலா நகர் பகுதியில் குடியிருக்கும் நாங்கள் கட்டுமானத் தொழில் செய் பவர்களாகவும், அணி திரட் டப்படாத தொழிலாளர்க ளாகவும் உள்ளோம். தினக்கூலியாக சம்பா தித்த பணத்திலும், வங்கியில் லோன் வாங்கியும் வீடு கட்டி வசித்து வருகிறோம். இதில் நாங்கள் சம்பாதிக்கும் பணம் வங்கியில் வாங்கிய லோனுக்கு வட்டியை அடைப் பதற்கே போய்விடுவதால், கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்நிலையில் இப்பகுதி யில் 40 அடி சாலை வருவதாக வும், இதற்காக சாலையை அளவீடு செய்ய வருவதாக நாங்கள் அறிகிறோம். எனவே தாங்கள் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரம் பாதிக் காத வகையில், எங்களது வீடுகளை பாதுகாத்து தரு மாறு கேட்டுக் கொள் கிறோம்” என கூறியிருந்தார். மனுவை அதிகாரியிடம் கொடுத்த போது பகுதி செயலாளர் ரபீக் அஹமது உள்ளிட்டோர் உடனிருந்த னர்.