districts

img

இந்தியாவை பாதுகாத்திடுவோம்! பிப்.16 வேலைநிறுத்தத்தை விளக்கி கரூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

கரூர், பிப்.10 - தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய பாஜக ஆட்சியை கண்டித்தும், இந்தியாவை பாது காத்திட வலியுறுத்தியும் மத்திய, மாநில தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 16 அன்று நாடு  தழுவிய வேலைநிறுத்தம், மறியல் போராட் டம் நடைபெற உள்ளது.  இந்தப் போராட்டத்தை விளக்கி எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், எஸ்கேஎம் உள்ளிட்ட பல்வேறு  சங்கங்களின் சார்பில் கோரிக்கை விளக்க மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டல  அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு எல்பிஎப் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு  தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்  செயலாளர் சி.முருகேசன் சிறப்புரையாற்றி னார். மாவட்ட துணைச் செயலாளர் வி.பால சுப்பிரமணியன், எல்பிஎப் மாவட்டச் செய லாளர் பழ.அப்பாசாமி, ஐஎன்டியுசி மாவட்டச்  செயலாளர் எஸ்.கணேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ் வடிவேலன்,  டிடிஎஸ்எப் மாநிலத் தலைவர் ஏ.ஷாஜ ஹான், எல்எல்எப் மாவட்ட அமைப்பாளர் மா. சுடர்வளவன் உள்ளிட்டோர் பேசினர்.