districts

img

தடையின்றி மின் இணைப்பு வழங்குக! அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 19- மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசா யிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பல தலைமுறைகளாக கோயில், ஆதீனம், அறக் கட்டளை மனைகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்க ளுக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் தடை யின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி இப்போராட் டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் த.ராயர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ். துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன்,  மாநிலக்குழு உறுப்பினர் பி.குணசுந்தரி ஆகியோர் உரையாற்றினர்.  சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். முன்னதாக கோட்டாட்சியர் வ.யுரேகா நிர்வாகி களை  பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை களை கேட்டறிந்து, உடனடியாக மின் இணைப்பு வழங்க  மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை யடுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை ஆர்ப்பாட்ட மாக நடத்தி கலைந்து சென்றனர்.