districts

img

பேரூராட்சிகளுக்கும் நூறு நாள் வேலை வழங்குக!

தஞ்சாவூர், டிச.14 - அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம்  சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் பேரூராட்சி அலு வலகம் முன்பு, தமிழக அரசு அறி வித்துள்ள நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமகளூர் பேரூ ராட்சியில், தொழிலாளர்கள் வேலை கேட்டு  மனு கொடுக்கும் இயக்கம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சேது பாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஏ.எம்.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆ.இளங்கோவன் முன்னிலை வகித்தார். வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர். வாசு, மாவட்டப் பொருளாளர் கே.அபி மன்னன் ஆகியோர் பேசினர்.  மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப் பையா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள் (சேதுபாவாசத்திரம்), எம். இந்துமதி (பேராவூரணி) ஒன்றியக்குழு உறுப் பினர்கள், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

150 மனுக்கள் பேரூராட்சி செயல்  அலுவலர் புனிதவதியிடம் வழங்கப்பட்டது.  நூறுநாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக  அதிகரித்து, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அறிவித்தவாறு, பெருமகளூர் பேரூராட்சியில் வேலையை உடனடியாக துவங்க வேண்டும். கூடுதல் நிதியை ஒதுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  குடவாசல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ள நகர்ப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மற்றும் கொர டாச்சேரி பேரூராட்சிகளுக்கும் உடனே அமுல் படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு  விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி பேரூராட்சி அலுவல கத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய  செயலாளர் ஆர்.மணியன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் விளக்கவுரையாற்றினார், மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா, மாவட்ட தலைவர் எம்.கலைமணி ஆகியோர்  கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.