புதுக்கோட்டை, மே 13 -
வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதிய ழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு முடிவு களை விளக்கி மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சியினால் சாகுபடிகள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டன. இதில் நெல் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். குறிப்பாக ஆவுடையார்கோ வில் தாலுகாவில் 2826 ஹெக்டேர், மண மேல்குடி தாலுகாவில் 1786 ஹெக்டேர், அறந்தாங்கி தாலுகாவில் 517 ஹெக்டேர் அளவுக்கு நெல் பயிர்கள் கடும் வறட்சி யினால் பாதிப்புக்கு உள்ளானது. பயிர்ப் பாதிப்புகளை அதிகாரிகள் கணக்கீடும் செய்துவிட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் இது குறித்து மாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.
ஆனாலும், இதுவரை பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் விவசாயி கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். எனவே, விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு உடனடி யாக வழங்க வேண்டும் என தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.