districts

img

பணி மேம்பாட்டு பணப்பலன் வழங்குக! பல்கலை. ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.4 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் வியாழனன்று வாயிற் முழக்க போராட்டம் நடைபெற்றது. அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பணப்பலன் வழங்க வேண்டும்.  பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும். எம்.ஃபில், பி.எச்.டி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு - முனைவர் பட்டம் நிபந்தனைக்கு விலக்கு  அளிக்க வேண்டும் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் முனைவர் ஏ.சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் கல்லூரி கிளை செயலாளர் பேரா. ஸ்ரீதர் தங்கத்துரை முன்னிலை வகித்தார். பேரா.பியூலா தங்கத்துரை வாழ்த்திப் பேசினார். கல்லூரி கிளை துணைத் தலைவர் பேரா. கோபிநாத் நன்றி கூறினார்.