districts

img

அங்கன்வாடி பணியாளர் மீது திட்ட அலுவலர் தாக்குதல்

சிஐடியு ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி,  ஜூலை 9 - அங்கன்வாடி பணியா ளர் செல்வியை தரக்குறை வாக பேசி தாக்கிய புதுக் கோட்டை மாவட்ட குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலு வலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய  வலியுறுத்தி கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே உள்ள மேலப்பட்டு அங்கன் வாடி மையத்தில் பணி யாற்றுபவர் செல்வி. இவரை, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் புவனேஸ்வரி மரியாதை குறைவாக பேசி,  அடித்து துன்புறுத்தி யுள்ளார். அலுவலர் புவ னேஸ்வரி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா தலைமையில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன் வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.