districts

எமிஸ் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/அரியலூர், ஜன.5 -  எமிஸ் பணியிலிருந்து ஆசிரியர் களை விடுவிக்க வேண்டுமென வலியு றுத்தி வியாழனன்று ஆசிரியர்கள் கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணை எண்-243 ஐ திரும்பப் பெற்று, பழைய நடைமுறையில் முன்னு ரிமை அளிக்க வேண்டும். பதவி  உயர்வை பழைய நடைமுறையிலேயே செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை சரி செய்து, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  அரசுப் பள்ளிக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளையும், அரசு  உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்க  வேண்டும். ஈட்டிய விடுப்பு,  அகவிலைப்படி நிலுவையை உடனடி யாக வழங்க வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திட வேண்டும்.  ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றிட வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக் கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  வியாழனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் வட்டாரக் கிளை சார்பில், குரு விக்கரம்பையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் வட்டாரத் தலை வர் மு. மகேந்திரன் தலைமை வகித்தார்.  வட்டாரச் செயலாளர் ஏ.வி.சந்திர சேகர் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுப. குழந்தைசாமி பேசினார். வட்டாரப் பொருளாளர் க.திருஞானவேல் நன்றி கூறினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பி னர் பொ.சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அரியலூர் அரியலூர் பல்துறை வளாகத்தில்  உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள்ஜோதி தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவபாக்கியம், வட்டாரப் பொருளாளர் சேகர் உள்ளிட் டோர் கோரிக்கை விளக்க உரை யாற்றினர். திருமானூரில் வட்டாரச் செயலர் தாமஸ் ரூபன், தா.பழூரில் வட்டாரச் செயலர் அன்பு ஆகியோர் தலைமை வகித்தனர்.