districts

திருச்சி முக்கிய செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை, செப்.3 - புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், நீர்பழனி வரு வாய் கிராமத்தில் 11.9. 2024 (புதன்) அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் மக்கள் தொ டர்பு முகாம் நடைபெற வுள்ளது.

பணி திறன் மேம்பாட்டு பயிற்சி

அறந்தாங்கி, செப்.3 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய இரண்டு  ஹைடெக் லேப் மையங்க ளில் செயல்திறன் மிகு  வகுப்பறை மற்றும் கணினி  துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி  திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.  இந்நிகழ்வினை மண மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  ஜீவா னந்தம் தொடங்கி வைத் தார். மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணியம், வட்டாரக் கல்வி அலுவலர் செழியன் மற்றும் வட்டார  வளமைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இந்நிகழ்வில் டக்ஸ் தட்டச்சு, சுவரொட்டி உரு வாக்கம், லைப்பர் ஆபீஸ், இம்ப்ரெஸ், தமிழ் தட்டச்சு, கூகுள் இயக்ககம், ஹை டெக் லேப் செயற்கை நுண்ணறிவு மற்றும் மணற் கேணி போன்ற தலைப்பு களில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கொடுக்கப் பட்டது.

பெண் குழந்தையை காப்போம் விழிப்புணர்வு

அரியலூர், செப்.3 - அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், மாவட்ட  சமூக நலத்துறை சார்பில்  பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம்  எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப் பள்ளியின் தலைமை ஆசி ரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சமூக நலத்துறையின் பாலின வல்லுநர் இந்துமதி, முதல் வரின் பெண் குழந்தை கள் பாதுகாப்பு, தமிழ் புதல்வன், புதுமைப் பெண்  உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பெண் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக, மனரீதி யாக யாரெனும் தொந்தரவு  அளித்தால், 1098 என்ற  தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொண்டு தீர்வினை பெற வேண்டும்  எனக் கூறி, மாணவி களுக்கு துண்டு பிரசுரங் களை வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

மருத்துவ முகாம்

பாபநாசம், செப்.3 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, கூடலூர் கிரா மத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் முகாம் நடந்தது. இதில் கபிஸ்தலம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக்  மற்றும் மருத்துவக் குழு வினர் மலேரியா, டெங்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் இதர நோய்கள் உள்ளதா என 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம்  பரிசோதனை மேற் கொண்டனர். ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், ஒன்றியக் கவுன்சிலர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

சட்ட விதிகள் மீறல் 6,600 கிலோ நெல்  விதைகளை விற்க தடை

தஞ்சாவூர், செப்.3 -  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விதை விற்பனை நிலை யங்களில் அலுவலர்கள் திங்கள்கிழமை நடத்திய ஆய்வில்,  சட்ட விதிமீறல் தொடர்பாக 6,600 கிலோ நெல் விதைகளை  விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, தஞ்சாவூர்,  மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், ஆலங்குடி, திருக்கருகாவூர், பாபநாசம், இரும்புத்தலை, கும்பகோ ணம் ஆகிய பகுதிகளிலுள்ள 18 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி தலைமையில், மதுரை மாவட்ட விதை ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அகிலா, கோபி ஆகி யோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.  இதில், சம்பா நெல் சாகுபடிக்கு இருப்பு வைக்கப் பட்டுள்ள விதைகளின் தரம், இருப்பு அளவு, விதை சட்ட  விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது,  விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை  செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்த னர். மேலும், 36 விதை மாதிரிகள் முளைப்பு திறன் குறித்த  ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு, தஞ்சாவூர் விதை பரிசோ தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. விதை சட்ட விதிகளை  மீறியதாக ரூ.5.79 லட்சம் மதிப்புள்ள 6,600 கிலோ விதை களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

செப்.10-இல் தொடக்க கல்வி  ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

பெரம்பலூர், செப்.3 - கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்.10 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொடக்க கல்வி ஆசிரி யர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய் துள்ளது.  பெரம்பலூரில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் போராட்ட ஆயத்த  கூட்டம் திங்களன்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக ஆசிரி யர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமை  வகித்தார். சிறப்பு விருந்தினராக டிட்டோஜாக் மாநில  உயர்மட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு முழுமையாக பாதிக் கப்படும் அரசாணை 243-ஐ முழுமையாக ரத்து செய்ய  வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்ட முறையை கொண்டு வர வேண்டும். இடை நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஒன்றிய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பி.லிட், பி.எட் முடித்து பதவி உயர்வு பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் தணிக்கை தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்.10 அன்று நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு படுவது, செப்.9 அன்று வரை ஆசிரியர்களை பள்ளிகள் தோறும்  நேரில் சந்தித்து அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க  அழைப்பு விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

சிறுமியை வன்கொடுமை செய்ய  முயன்ற இளைஞர் கைது

தஞ்சாவூர், செப்.3 -  தஞ்சாவூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற  இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பசுபதி கோவிலைச் சேர்ந்தவர் என்.அருள்ராஜ் (38). இவர் ஆக.31 அன்று இரவு தஞ்சாவூர் அருகேயுள்ள கிரா மத்தில் சாலையோரம் நின்ற மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படு கிறது. இதை பார்த்த பொதுமக்கள், அருள்ராஜை பிடித்து  தாக்கி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த அருள்ராஜை தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறை யினர் சேர்த்தனர். மேலும், அருள்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

மருதுபாண்டியர் கல்லூரியில் கருத்தரங்கம்

தஞ்சாவூர், செப்.3 -  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு சார்பாக ஒருநாள் கருத்த ரங்கம் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர்  கொ. மருதுபாண்டியன்  வழிகாட்டுதலின்படி நடை பெற்றது.  மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ், உயிர் வேதியியல் துறைத் தலைவர் வி.இராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். கருத்தரங்கில், மதுரை மண்டலத்தின் இந்திய தரநிலை பணியகத்தின் பதவி உயர்வு அலுவலர் எம்.சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது மாணவ, மாணவிகளுக்கு தரச்சான்றின் பயன்களையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். தரச்சான்று தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த கோரிக்கை

புதுக்கோட்டை, செப்.3 - ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் புதுக்கோட்டை யில் செவ்வாய்க்கிழமை தர்ணா நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்  இரா.சரவணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரி.இராமு தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் கா. செயபாலன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர்.  மாநிலச் செயலாளர் க.கருப்பையா நிறைவுரையாற்றி னார்.  அரசாணை 204-ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டண மில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். சிகிச்சை  செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூ லிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும் அல்லது திட்டத்தை அரசே  ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.