திருச்சிராப்பள்ளி, மார்ச் 9 - முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிப்.12 அன்று போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 6 மற்றும் 7-ஐ ரத்து செய்ய வேண்டும். மொபைல் ஆப்பில் கணக்கீட்டு பணிக்கு உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும். பிபி எண் 4-ஐ ரத்து செய்ய வேண்டும். சோலார் எனர்ஜி நுகர்வோரை தேடிச் செல்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கோட்ட செயலாளர்கள் சிவச்செல்வம், மணப்பாறை தனராஜ், லால்குடி அன்பழகன், துறையூர் அர்ச்சுனன், கிழக்கு மணி, நகரியம் கருப்பையா, செந்தில்குமார் ஆகியோர் பேசினர்.