districts

img

திருச்சி எரக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்கக்கோரி சிபிஎம் தலைமையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4- 100 நாள் வேலை வழங்கக்கோரி  சிபிஎம் தலைமையில் எரக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு வியாழ னன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் வட்டம் எரக்குடி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட மக்கள் அனைவ ருக்கும் 100 நாள் வேலை வழங்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்  வியாழனன்று எரக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மூத்த தோழர் பாலசுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர். போராட்டம் துவங்கி நான்கு மணி நேரமாக எந்த அதிகாரிகளும் உரிய தகவல் தராததால் காத்திருப்பு போரா ட்டம் கஞ்சி காய்ச்சும் போராட்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் துறையூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பேச்சுவார்த்தையில் உப்பிலி யபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், இள நிலை பொறியாளர் மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர். இதில், வரும் 11ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் ஆயிரம் பணியாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பின் னரே போராட்டம் கைவிடப்பட்டது.