districts

img

ஆதிதிராவிடர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கல்: எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

புதுக்கோட்டை, பிப்.17-  தரமற்ற உணவு வழங்கப்படுவதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை விடுதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாட்சியை தங்கிய மன்னர் கல்லூரி ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்று இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.  இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதி மாணவர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.