பாபநாசம், அக்.25 - போலியோ தினத்தையொட்டி, பாபநாசம் ரோட்டரி கிளப், வலங்கைமான் ரோட்டரி கிளப், ரிவர் சிட்டி ரோட்டரி கிளப், அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் இணைந்து போலியோ விழிப்புணர்வு பேரணியை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணியை பாபநாசம் காவல் டி.எஸ்.பி முருகவேலு, பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார் தொடங்கி வைத்தனர். பாபநாசத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற ஆபிதீன் பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடையே போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் உதவி ஆளுநர் அறிவழகன், பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல், செயலர் ரவிச்சந்திரன், ரிவர் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் கனிராஜ், அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் தலைவர் ரவிச்சந்திரன், வலங்கைமான் ரோட்டரி கிளப் தலைவர் கோவிந்தராஜன், லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சாப்ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.