பொய்த் தோற்றத்தை உருவாக்கும் பிரதமர் ம.ம.க தலைவர் கண்டனம்
பாபநாசம், ஜன.3- தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியிருப்பதாக, திருச்சி யில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசி யது சரியானது அல்ல என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான பேராசிரியர் ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அளித்து இருப்பதாக வும், தமிழ்நாட்டுக்கு இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியுள்ளோம் என்றும் பேசியிருக்கிறார். 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் தந்த நிதியை விட, தற்போது இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியிருப்பதாகவும் பிரதமர் பேசியிருக்கிறார். கடந்த 10 ஆண்டு களில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை ஒன்றிய அரசு அளித்துள்ளது என்று அறிவித்த பிரதமர், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள தொகை என்னவென்பதை குறிப்பிட்டுச் சொல்ல மறுக்கிறார். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாநி லங்களுக்கும், வழங்கப்பட்ட தொகையை ஏதோ தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது போன்ற பொய்த் தோற்றத்தை பிரதமர் உருவாக்குகிறார். தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயை அதிகமாக பெற்றுக் கொண்டு, மக்கள் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க மறுப்பது மாபெ ரும் அநீதி. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி
மன்னார்குடி, ஜன.3 - ஒப்பந்தத் தொழிலா ளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு சரி செய்யப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர் களின் முடக்கி வைக்கப் பட்ட வருங்கால வைப்பு நிதி கணக்கை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜனவரி 3 ஆம் தேதி யிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வ தென ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர்கள் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கம் (சிஐடியு), தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் தீர்மா னிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாள் செவ்வாய்க்கிழமை மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். மன்னார்குடி நகராட்சி ஆணையர், துப்புரவு அலுவ லர், துப்புரவு ஆய்வாளர், தொழிலாளர் தரப்பில் சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். ஹனிபா, துணைத் தலைவர் ஜி.ரகுபதி, மதிப் புறு தலைவர் கே.சிவ சுப்பிரமணியன், ஒப்பந்த தாரர் ஆர்.வி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையின் முடிவில், தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி கணக்கு தேக்கத்தை இம்மாத இறுதிக்குள் சரி செய்வது, ஒவ்வொரு மாதமும் தொழி லாளர்களின் ஊதியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துவது, தொழிலா ளர்களுக்கான ஓய்வ றையை நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ஒதுக்கீடு செய்வது, கொரோனா பெருந்தொற்றால் மரண மடைந்த ஆச்சி என்பவ ரது வாரிசுதாரரை அலுவ லகத்திற்கு நேரில் வரச் செய்து, மேலும் விவரங் களை பெற்று இழப்பீடு பெற்று தருவதற்கான முன் மொழிவு நடவடிக்கை எடுப்பது. வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்த செய்யப் பட்ட தொகை பற்றிய விவ ரங்களை உடனே தெரி விப்பது என உறுதியளிக் கப்பட்டது. இதனால் போ ராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
கோயில்களில் நகை, பணம் திருட்டு
அரியலூர், ஜன.3 - அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே 2 கோயில்களில் நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விக்கிரமங்கலம் அருகேயுள்ள நத்தைவெளி கிரா மத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை காலை பூசாரி சென்ற போது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் கிராம முக்கியஸ்தர்களுடன் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் அணிந்திருந்த 3 பவுன் நகை, உண்டியலில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன. இதேபோல், விக்கிரமங்கலம் அருகேயுள்ள நரியங் குழி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், அம்மன் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் சுமார் ரூ.50 ஆயிரம் உண்டியல் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்றது தெரியவந்தது. மேற்கண்ட 2 திருட்டு சம்பவங்கள் குறித்து விக்கிர மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நூலக உறுப்பினர் அட்டை வழங்கல்
அரியலூர், ஜன.3 - அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு நூலக உறுப்பி னர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக அலுவலர் ஆண்டாள் 6-10 ஆம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவர்களுக்கு நூலக உறுப்பினருக்கான அட்டையை வழங்கினார். 150 மாணவர்களுக்கான நூலக சந்தாவை ஆசிரியர் செவ்வேள் செலுத்தினார்.
மழை நீருடன் கழிவு நீரும் கலந்த வீட்டிற்குள் இருந்த கூலித்தொழிலாளி பலி அரசு உரிய இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை
தூத்துக்குடி, ஜன. 3 தூத்துக்குடியில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதியில் பெய்த கனமழை காரண மாக தூத்துக்குடி தேவர் காலனி பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்து அங்கிருந்த 450 குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் முகாம்களிள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த மழைவெள்ளத்தில் தேவர் காலனி 4வது தெரு பகுதியில் வசித்து வந்த கூலி தொழிலாளிஆச்சிமுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் இருந்தார். மழை வெள்ளத்தில் தண்ணீ ரில் மூழ்கிய அவரது குடும்பத்தை காவல் துறையினர் மீட்டு முகாமில் தங்க வைத்த னர். மழைநீரில் கழிவுகள் கலந்த மழை நீரைகுடித்ததால் ஆச்சிமுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகாமிலிருந்து செவ் வாய்க்கிழமை வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டை சுற்றி முழங்கால் அளவு கழிவு நீர் கலந்த மழை நீர் இருந்துள்ளது. அந்த தண்ணீரிலேயே தனது குழந்தை கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆச்சிமுத்து வசித்து வந்துள்ளார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆச்சிமுத்து செவ்வாய்க்கிழ மை மாலை வலிப்பு வந்து மழை நீரில் பரிதாபமாக பலியானார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பலியான ஆச்சி முத்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டுமென அவரது உற வினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் துவங்கின
தூத்துக்குடி, ஜன.3 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன இதை அடுத்து மழை வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்பு செவ்வாயன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விடுபட்ட நான்கு தேர்வுகள் புதன்கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. காலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் ஒன்பதாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
சாலையில் கதிர் அடித்தவர் பலி
அருப்புக்கோட்டை, ஜன.3- விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே பந்தல்குடி அருகே உள்ள போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் செல்வ ராஜ் (50). இவர் அங்குள்ள புறவழிச்சாலை சந்திப்பில் குதிரைவாளி கதிர் அடித்துள் ளார். அப்போது, வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பந்தல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்டம், ஆனையூரைச் சேர்ந்த மூர்த்தி (45) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.