மயிலாடுதுறை, மே 18- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் 2024-2025 கல்வி யாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உரை யாற்றுகையில், “10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளி யாகி, அதில் மயிலாடுதுறை மாவட்டம் 10 ஆம் வகுப்பில் 27 ஆவது இடமும், 12 ஆம் வகுப்பில் 29 ஆவது இடமும், 11 ஆம் வகுப் பில் 35 ஆவது இடமும் பெற்றுள்ளது. தேர்ச்சி சத வீதத்தை உயர்த்த மாணவர்களை ஊக்கப்படுத்திட வேண்டும். 2024-2025 கல்வியாண் டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு அனைத்து பாடங்களுக்கும் பொதுத் தேர்விற் கான சிறப்பு கை யேடு வழங்கி, அதில் உள்ள பாடங்களை தொடர்ந்து கற்பிக்க வேண்டும். குறிப்பாக ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா விடை களை நன்கு கற்பித்து மாணவர்களை தயார்படுத்த வேண்டும். 2024-2025 கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று நூறு சதவீதம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்” என்றார். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞான சங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் ஆகி யோர் உடனிருந்தனர்.