தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை காவிரியாற்றின் கரையில் பனை விதைகள் நடும் திட்டத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.