திருச்சிராப்பள்ளி, மே 27 - திருச்சி அருகே தோட்டத் தொழி லாளி மர்மமான முறையில் உயிரி ழந்த சம்பவத்தில் தோட்டத்தின் உரி மையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள விடுதலைபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் பி.கே. அகரம் என்ற ஊரில் செந்தில் என்பவ ரது தோட்டத்து பண்ணையில் கூலித் தொழிலாளியாக ரூ.5000 சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். முருகேசன் கடந்த நான்கு மாதங்களாக தனது வீட்டிற்குச் செல்லவில்லை. முருகேசன் மனைவி செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது. போனை யாரும் எடுத்துப் பேசவில்லை. சில தருணங்களில் தோட்டத்தின் உரிமையாளர். செந்தில் போனை எடுத்து அவர் பணியிலிருப்பதாகக் கூறி யுள்ளார். நேரில் சென்றும் முருகே சனை அவரது மனைவி சந்திக்க முடிய வில்லை. இந்நிலையில் மே 23 ஆம் தேதி செந்தில் தனது இரு சக்கர வாகனத் தில் முருகேசனை அழைத்து வந்து விடு தலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு, செலவுக்கு ரூ.1000 கொடுத்து மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளு மாறு கூறிச் சென்றுள்ளார். அவர் சென்ற அடுத்த பத்து நிமிடங்க ளில் முருகேசன் உயிரிழந்தார். இதை யடுத்து முருகேசன் மனைவி காவல் துறையில், தனது கணவர் மரணத்திற்கு செந்தில், தனபால் ஆகியோர்தான் காரணம். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென புகாரளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் முருகேசனின் உடலை உடற்கூராய்விற்காக லால்குடி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வில் தாமதம்
லால்குடி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக முருகேசன் உடல் கூராய்வு செய்யப்படவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் எம்.ஜெயசீலன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சந்தி ரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரஜினிகாந்த், ஜெகதீசன், பூ மாலை, கோமதி, தங்கராஜ் மற்றும் முருகேசன் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை யினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து உடற்கூராய்வு நடை பெற்றது. முருகேசனின் உடலை உறவி னர்கள் பெற்றுக் கொண்டனர். போராட்டம் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய எம்.ஜெயசீலன், முரு கேசன் மரணத்திற்கு காரணமானவர் கள் என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செந்தில், தனபால் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். செந்திலின் தோட்டத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென் றார். இந்நிலையில் வெள்ளியன்று காவல்துறையினர் தோட்ட உரிமையா ளர் செந்திலை கைது செய்தனர்.