districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி மறியல்

தஞ்சாவூர், ஜன.31 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் செவ் வாயன்று ஜாக்டோ- ஜியோ அமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, பன்னீர்செல்வம், சத்தியசீலன், ரங்கசாமி ஆகியோர் தலைமையில் திரண்டனர். இதில், அரசு ஊழியர் சங்கம் மாநிலச் செய லாளர் எஸ்.கோதண்டபாணி, சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆற்றுப் பாலம் காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்  ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர் மகேந்திரன் தலைமையில்  150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர்  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பெரியசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலை வர் பொன்ஜெயராம், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செய லாளர் எம்.எஸ்.அன்பழகன், தமிழ்நாடு  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ், அனைத்துத் துறை மருந்தாளுநர் சங்க  மாநிலச் செயலாளர் இளங்கோ ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர்.