districts

img

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆதியன் சமூகத்தினர் மனு

புதுக்கோட்டை, அக்.30 - பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்று அழைக்கப் படும் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்க வலி யுறுத்தி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை அருகே சிப்காட் பகுதியில்  உள்ள காமராஜர் நகரில் பூம்பூம் மாட்டுக்காரர் கள் என்று அழைக்கப்படும் ஆதியன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள 43 குழந்தைகள் அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் 10 ஆம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 16 பேர் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டதாகவும், சாதிச் சான்றி தழ் இல்லாததால் 11 ஆம் வகுப்பில்கூட சேர முடி யாத நிலையில் தங்கள் சமூக மக்கள் தள்ளப் பட்டுள்ளதாகவும் கூறி, அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து திங்களன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “காம ராஜர் நகரில் மட்டும் 30 குடும்பத்தினர் வசித்து  வருகிறோம். புதுக்கோட்டை மாவட்டம் முழுவ தும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது பூர்வீக தொழிலாக பூம்பூம்  மாட்டுக்காரர் தொழில் உள்ளது. எனவே, எங்க ளுக்கு ஆதி அல்லது ஆதியன் என்ற பழங்குடி யினர் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்” என்றனர்.