districts

img

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

அறந்தாங்கி, ஜன.16 - மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். புதுக்கோட்டை மாவட் டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் 15-க்கும்  மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் செயல்படுகின்றன. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கட்டு மாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப் பட்டினம் போன்ற பகுதி களில் நாட்டுப்படகில் பிடிக் கப்படும் மீன்களும், கோட் டைப்பட்டினம், ஜெகதாப்பட் டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப் படகுகள் மூலம் பிடிக்கப்ப டும் மீன்களும் விற்ப னைக்கு வருகின்றன.  அதுமட்டுமின்றி, இராம நாதபுரம், பாம்பன், இரா மேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக் கால் போன்ற பகுதிகளி லிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்கு வதற்கு திருச்சி, மதுரை,  புதுக்கோட்டை, காரைக் குடி, அறந்தாங்கி, பட்டுக் கோட்டை போன்ற பல்வேறு  பகுதிகளிலிருந்து மீன் வியா பாரிகள் சரக்கு வாகனங் களில் தினமும் வந்து செல் கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன்  வரத்து அதிகமாக இருக்கும்.  இந்நிலையில் மாட்டுப் பொங்கல் தினமான செவ்வா யன்று மீன்களை வாங்கு வதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.  இதேபோன்று கோழி மற்றும் ஆடு இறைச்சி கடை களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதி காலை 4 மணி முதல் கட்டு மாவடியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் அப் பகுதி பரபரப்பாக காணப் பட்டது.