விருதுநகர், ஆக.7- தாய்ப்பால் வழங்காத குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு அதிகரிக்கும் என விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் குழந்தை கள் நல மருத்துவர் அரவிந்த் பாபு தெரிவித்தார். உலக சுகாதார அமைப் பின் சார்பில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த் தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படு கிறது. இந்நிகழ்ச்சிக்கு மருத்து வக் கல்லூரி முதல்வர் (பொ) லலிதா தலைமை வகித்தார். மருத்துவர் சங்கீத் வரவேற்றார். மருத்துவக் கண்காணிப்பாளர்(பொ) வெங்கட்ராமன், துணை கண்காணிப்பாளர் அன்பு வேல், நிலைய மருத்துவர் (பொ) பாண்டிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பேராசிரியர் அரவிந்த் பாபு கூறியதாவது: தாய்ப்பால் முறையாக வழங்கப்படாத குழந்தைகள் நோயால் பாதிக்க வாய்ப்பு கள் அதிகம். தாய்ப்பால் வழங்குவதால் குழந்தை களுக்கு ஒவ்வாமை, காது களில் ஏற்படும் தொற்று ஆகி யவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். மேலும், குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேக மாக வளர்ச்சியடைய தாய்ப்பால் மிக அவசியமா கும். தாய்மார்களுக்கு கருப்பை புற்றுநோய், மார் பக புற்றுநோய் போன்றவற் றின் தாக்குதல் அதிகரிக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், செவிலி யர் பயிற்சிப் பள்ளி மாணவி களின் நாடகம், வில்லுப் பாட்டு மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடைபெற்றன. முடிவில் மருத்துவர் ராதிகா நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங் கேற்றனர்.