அரியலூர், ஜூலை 30-
கூழாங்கற்கள் கடத்திய லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டு, இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டி மடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூழாங்கற்களை லாரிகளில் கடத்திச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங் கத்துறை உதவி இயக்குநர் பிரியா தலைமையிலான அதி காரிகள் விருத்தாச்சலம் -ஜெயங்கொண்டம் நெடுஞ்சா லையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்த னர். இதில் அந்த லாரிகளில் கூழாங்கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு லாரிகளை யும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஆண்டி மடம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைய டுத்து லாரிகளின் ஓட்டுநர்கள் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (30) மற்றும் விருத்தாசலம் அருகே நெடி யப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.